Advertisement

ஓய்வை அறிவித்த மலிங்காவிற்கு குவியும் வாழ்த்துக்கள்!

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா ஓய்வு பெற்றதையடுத்து, ஜாம்பவான்கள் குமார் சங்கக்காரா, மகிலா ஜெயவர்தனே வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 14, 2021 • 22:52 PM
Your contribution to Sri Lanka, world cricket will stand for all time: Sangakkara, Jayawardene congr
Your contribution to Sri Lanka, world cricket will stand for all time: Sangakkara, Jayawardene congr (Image Source: Google)
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்தவர் லசித் மலிங்கா. இவரது தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2014ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது. 

மேலும் 2011ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த ஜனவரி மாதம் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, டி20 கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக மலிங்கா இன்று அறிவித்தார்.

Trending


இதையடுத்து அவருக்கு இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா தனது ட்விட்டர் பதிவில், "சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துகள். இலங்கை கிரிக்கெட்டுக்கும், சர்வதேச கிரிக்கெட்டும் அளித்த உங்களது பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும். உங்களுடன் விளையாடியதில் மகிழ்ச்சி. இப்போதிலிருந்து நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு வாழ்த்துகள். கொடுப்பதற்கு நிறைய அறிவு இருக்கிறது. ஜாம்பவான்." என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மகிலா ஜெயவர்தனே "18 வயது வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக வண்ணம் தீட்டப்பட்ட சுருண்ட முடியுடன் காலேவில் முதன்முறையாக எதிர்கொண்டது சுவாரஸ்ய நினைவுகளைத் தருகிறது. அணியில் அற்புதமான வீரர். வாழ்த்துகள் நண்பா. நன்றி!!" என்று பதிவிட்டுள்ளார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதைத் தொடர்ந்து, அவருக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement