
Yuzvendra Chahal loses his cool and yells at the umpire during an IPL 2022 match against LSG (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசனின் 20ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஷிம்ரோன் ஹெட்மையர் (59), படிக்கல் (29), அஸ்வின் (28) ஆகியோர் ரன்களை சேர்த்தனர். இதனால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 165/6 ரன்களை சேர்த்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் ஓபனர் கே.எல்.ராகுலை 0 (1) முதல் பந்திலேயே போல்ட், கிளின் போல்ட் ஆக்கினார். இதனைத் தொடர்ந்து ஒய்ட் சென்ற நிலையில், இரண்டாவது பந்திலேயே கிருஷ்ணப்பா கௌதமை 0 (1) LBW ஆக்கினார். இதனால் லக்னோ அணி 1-2 என திணறியது.