பந்து வீச்சில் தொடக்கத்தையும் இறுதியையும் சிறப்பாக செய்தோம் - சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 76 ரன்களையும், தீபக் ஹூடா 50 ரன்களையும் சேர்த்தனர்.
கிரிக்கெட்: Tamil Cricket News