
இங்கிலாந்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. பரபரப்பான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இறுதி வரை போராடி கடைசி ஓவரில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
எட்டு அணிகள் பங்குபெற்றிருந்த இத்தொடரில் குரூப் ஏ, குரூப் பி என இருகுழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், இந்தியா, தென் ஆப்பிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றிருந்தன.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியைச் சந்தித்து தொடரிலிருந்து வெளியேறின. அதேசமயம் பங்குபெற்ற 4 லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஒரே அணியாக இந்திய அணி திகழ்ந்தது. ஷிகார் தவான் பேட்டிங்களிலும், ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணியின் கோப்பை கனவை உறுதிசெய்தனர்.