
#Onthisday: Tendulkar became first batsman to register 15,000 ODI runs (Image Source: Google)
‘கிரிக்கெட்டின் கடவுள்’ என்ற புனைப்பெயருக்கு சொந்தக்காரார் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு உலகெங்கிலும் மற்ற கிரிக்கெட் வீரர்களைக் காட்டிலும் ரசிகர்கள் பட்டாளம் கொஞ்சம் அதிகம் தான்.
ஏனெனில் உலக கிரிக்கெட் வரலாற்றில் மூன்று வடிவிலான போட்டிக்களிலும் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர், அதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை இதுநாள் வரை தன்வசம் வைத்துள்ளார்.
கடந்த 1989ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களை விளாசி 15,921 ரன்களையும், 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களுடன் 18,426 ரன்களையும் குவித்துள்ளார்.