
Suryakumar Yadav, the youth uprising hero of cricket! (Image Source: Google)
சமீப காலமாக இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சூர்யகுமார் யதாவ். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகமானார்.
அதிலும் குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆச்சர் வீசிய தனது முதல் பந்தையே சிக்சருக்கு விளாசி மாஸான ஒரு எண்ட்ரியை கொடுத்திருந்தார். இதனால் தான் சூர்யகுமார் யாதவ் என்ற பெயர் பரபரப்பாக பேச தொடங்கியதா? என்றால். அதற்கு பதில் இல்லை.
அப்படி இருக்க எதனால் இவரது பெயர் அடிக்கடி வர்ணனையாளர்கள், ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியாது. அதற்கான காரணம் தான் என்ன என்று கேட்டால், அதற்கு முதலில் நாம் சூர்யகுமார் யதாவ்வின் வாழ்க்கை பதிவுகளை தான் பார்க்க வேண்டும்.