The federation
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
பெங்களூருவில் 14ஆவது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரை இறுதி சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
இரு அணிகளும் ஆட்ட நேரத்தில் தலா ஒரு கோல் அடித்து சமனில் இருந்தன. இதனால் இப்போட்டியில் பெனால்டி ஷாட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்து தொடங்கி வைக்க, சந்தேஷ் ஜிங்கன், சுபாஷிஷ் போஸ் உள்ளிட்டோர் பெனால்டி சரியாக பயன்படுத்தி 5 கோல் அடிக்க, குவைத் சார்பில் 4 கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.
Related Cricket News on The federation
-
இந்திய மல்யுத்த வீரர்கள் கைது- உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம்!
பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ...
-
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் கூடுதல் செயலாளர் வினோத் தோமர் சஸ்பெண்ட்!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) தலைவருக்கு எதிராக இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்திய நிலையில் கூட்டமைப்பின் கூடுதல் செயலாளர் வினோத் தோமரை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. ...
-
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்; விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் சூடுபிடித்துள்ள சூழலில் மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47