Ashok sigamani
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல்: அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக செயல்பட்டு வந்த ரூபாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், இந்த சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தலைவர் பதவிக்கு அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணியும், பிரபு என்பவரும் போட்டியிட மனுதாக்கல் செய்தனர்.
இன்று டிஎன்சிஏவின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பிரபு என்பவர் தேர்தலிலிருந்து தனது மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து அசோக் சிகாமணி போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.