Tamil nadu cricket association
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு கோல்ட்ஸ் அணி!
தமிழ்நாடு கிரிக்கெட் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள உள்ளூர் அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி மே 06ஆம் தேதி தொடங்கும் இச்சுற்றுப்பயணத்தில், நான்கு போட்டிகளைக் கொண்ட இரண்டு நாள் கிரிக்கெட் தொடரிலும், அதனைத்தொடர்ந்து 7 ஓருநாள் போட்டிகளிலும் தமிழ்நாடு அணி விளையாடவுள்ளது.
அதன்படி இத்தொடருக்கான தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக லக்ஷ்மிபதி பாலாஜியும், அணியின் ஆலோசகராக ராபின் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இந்த சுற்றுப்பயணத்திற்கான தமிழ்நாடு அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த அணியில் பிரதோஷ் ரஞ்சன் பால், நாராயண் ஜெகதீசன், சோனு யாதவ், லோகேஷ்வர், விமர் குமார் போன்ற வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.