Bangladesh premier league 2024
சோயப் மாலிக்கின் பிபிஎல் ஒப்பந்தம் ரத்து; வங்கதேச கிரிக்கெட்வாரியம் நடவடிக்கை!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக். இவர் தற்போது வங்கதேசத்தின் டி20 லீக் தொடரான பிபிஎல் தொடரில் ஃபார்ச்சூன் பாரிஷால் அணிக்காக விளையாடி வருகிறார். இதில் ஃபார்ச்சூன் பாரிஷால் - குல்னா டைகர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் விளையாடிய ஃபார்ச்சூன் பாரிஷால் அணி 187 ரன்கள் குவித்தது.
அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய குல்னா டைகர்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 ஓவர்களிலியே இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஃபார்ச்சூன் பாரிஷால் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியின் போது ஃபார்ச்சூன் அணி தரப்பில் பந்துவீசிய சோயப் மாலிக் ஒரே ஓவரில் 3 நோ-பால்களை வீசியது பெரும் சர்ச்சையாக மாறியது.