Delhi capitals vs lucknow super giants
காயம் காரணமாகவே நான் இதுவரை அதிகம் பந்து வீசவில்லை - அக்ஸர் படேல்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஐயடன் மார்க்ரம் 52 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 45 ரன்களையும், இறுதியில் ஆயூஷ் பதோனி 36 ரன்களையும் எடுத்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Related Cricket News on Delhi capitals vs lucknow super giants
-
புதிய தொடக்கத்திலிருந்து அடுத்த போட்டியை எதிர்கொள்வோம் - ரிஷப் பந்த்!
இந்த மைதானத்தில், டாஸ் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது. யார் முதலில் பந்து வீசினாலும், அவர்களுக்கு விக்கெட்டிலிருந்து நிறைய உதவி கிடைக்கிறது என்று லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47