Advertisement

புதிய தொடக்கத்திலிருந்து அடுத்த போட்டியை எதிர்கொள்வோம் - ரிஷப் பந்த்!

இந்த மைதானத்தில், டாஸ் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது. யார் முதலில் பந்து வீசினாலும், அவர்களுக்கு விக்கெட்டிலிருந்து நிறைய உதவி கிடைக்கிறது என்று லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement
புதிய தொடக்கத்திலிருந்து அடுத்த போட்டியை எதிர்கொள்வோம் - ரிஷப் பந்த்!
புதிய தொடக்கத்திலிருந்து அடுத்த போட்டியை எதிர்கொள்வோம் - ரிஷப் பந்த்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 23, 2025 • 11:02 AM

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
April 23, 2025 • 11:02 AM

அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஐயடன் மார்க்ரம் 52 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 45 ரன்களையும், இறுதியில் ஆயூஷ் பதோனி 36 ரன்களையும் எடுத்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

Also Read

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கருண் நாயர் 15 ரன்னிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் போரல் 51 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 57 ரன்களையும், கேப்டன் அக்ஸர் படேல் 34 ரன்களையும் சேர்த்ததன் மூலம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த், “இந்த ஆட்டத்தில் நங்கள் 20 ரன்கள் குறைவாகவே எடுத்திருந்தோம், மேலும் இந்த மைதானத்தில், டாஸ் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது. யார் முதலில் பந்து வீசினாலும், அவர்களுக்கு விக்கெட்டிலிருந்து நிறைய உதவி கிடைக்கிறது. அதனால் நாங்கள் பின்தங்கியிருக்க வேண்டியிருந்தது, எங்களால் அதைத் தவிர்க்க முடியவில்லை.

லக்னோவில் இது எப்போதும் நடக்கும், இரண்டாவது இன்னிங்ஸில், விக்கெட் சிறப்பாகி பேட்டிங் செய்யத் தயாராகிறது, அப்படித்தான் ஆட்டம் செல்கிறது, அதனால் நீங்கள் புகார் செய்ய முடியாது. ஆனால் ஒரு அணியாக, நாங்கள் சாக்குகளைத் தேடவில்லை. மேலும் இன்றைய ஆட்டத்தில் மயங்க் யாதவை விளையாட முயற்சி செய்தோம், ஆனால் போட்டி செல்ல செல்ல எங்கள் திட்டங்களை நாங்கள் மாற்ற நேரிட்டது. அழைத்துச் விளையாடவைக்க வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்.

Also Read: LIVE Cricket Score

மேலும் இன்று நாங்கள் பேட்டிங்கை வலுப்படுத்தும் நோக்கத்திலேயே அப்துல் சமத் மற்றும் டேவிட் மில்லரை முன் கூட்டியே களமிறக்க்னோம். ஆனால் அவர்கள் களமிறங்கிய தருணத்தில் விக்கெட் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கவில்லை. அதனால் வரும் போட்டிகளில் நாங்கள் எங்களுடைய சிறந்த கூட்டணியைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும். அதனால் புதிய தொடக்கத்திலிருந்து அடுத்த போட்டியை விளையாடப் போகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement