East zone vs west zone
தியோதர் கோப்பை: மீண்டும் சதமடித்து அசத்திய ரியான் பராக்; இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணி!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியோதர் கோப்பை ஒருநாள் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது போட்டியில் கிழக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டல அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
புதுச்சேரியில் நடைபெற்ற இப்போட்டியில் கிழக்கு மண்டல அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் அபிமன்யூ ஈஸ்வரன் 38 ரன்களுக்கும், உட்கர்ஷ் சிங் 50 ரன்களிலும், விராட் சிங் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரிசவ் தாஸ் 3 ரன்களிலும், கேப்டன் சவுரப் திவாரி 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, கிழக்கு மண்டல அணி 157 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.