Gautam gambhir
கிரிக்கெட்டில் ஒழுக்கம் பேசுபவர்கள் இப்போது எங்கே சென்றார்கள்? - கவுதம் கம்பீர்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் இங்கிலாந்து அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை வென்றது. இப்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வெற்றி பெற்றதால், ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்கிற கணக்கில் வலுவான முன்னிலையில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டிகள் என்றாலே அதில் பரபரப்பு மற்றும் சர்ச்சைகளுக்கு துளியும் பஞ்சம் இல்லாமல் இருக்கும். அந்த வகையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சில சச்சரவுகள் ஏற்பட்டன. முதலாவதாக மிச்சல் ஸ்டார்க் எடுத்த கேட்ச் முறையானது அல்ல. ஆகையால் அவுட் இல்லை என்று மூன்றாம் நடுவரால் முடிவுகள் கொடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இரண்டாவதாக, ஜானி பேர்ஸ்டோவ் சர்ச்சையான முறையில் ரன் அவுட் செய்யப்பட்டது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.