Gautam gambhir
புதிய ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்; ராகுலை பாராட்டிய கம்பீர்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர் முடிவுற்றவுடன் நேரடியாக மார்ச் 31ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. பல்வேறு அணிகள் இதற்கான ஆயத்த பணிகளில் இறங்கிவிட்டனர். இந்திய அணியில் இல்லாத வீரர்கள் ஐபிஎல் அணிகளுக்கு சென்று பயிற்சியிலும் இறங்கிவிட்டனர்.
இன்று, லக்னோவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டார். இந்த நிகழ்வில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் கௌதம் கம்பீர், கேப்டன் கேஎல் ராகுல் ஆகியோர் பங்கேற்றனர்.