Ind a vs nep
எமர்ஜிங் ஆசிய கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஏ அணி!
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா ஏ அணியை எதிர்த்து நேபாள் ஏ அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற நேபாள் ஏ அணி கேப்டன் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நேபாள் ஏ அணி 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இன்னொரு முனையில் நிதானமாக விளையாடிய கேப்டன் ரோஹித் 65 ரன்களில் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் நிஷாந்த் சிந்து பந்துவீச்சில் டெய்லண்டர்களும் ஆட்டமிழந்தனர். இறுதியாக நேபாள் அணி 39.2 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய ஏ அணி தரப்பில் நிஷாந்த் சிந்து 4 விக்கெட்டுகளையும், ஹங்கர்கேகர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.