India vs netherlands
பேட்ஸ்மேன்களின் வேலையை ரோஹித் எளிதாக்கியுள்ளார் - ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார்!
இந்திய அணி தற்பொழுது நடப்பு உலகக் கோப்பையில் எட்டு லீக் போட்டிகளையும் வென்று அடுத்து கடைசி மற்றும் ஒன்பதாவது லீக் போட்டியில் பெங்களூரு மைதானத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்திய அணியின் தொடர்ச்சியான வெற்றி இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதே நேரத்தில் நாக் அவுட் சுற்றில் இந்திய அணி வெற்றி பெறுவது குறித்து ரசிகர்கள் மிகவும் இந்த முறை நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இதுவரையிலான இந்திய அணியின் செயல்பாடு திறமையின் அடிப்படையிலும் மனரீதியான நம்பிக்கையின் அடிப்படையில் அற்புதமாக இருந்து வந்திருக்கிறது. இந்த இரண்டிலும் இந்திய அணியை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் மிகச் சிறப்பாக வழி நடத்தி இருக்கிறார்கள். இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பங்கு மிகப் பெரியது.