Advertisement
Advertisement

Indian premier league

ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகினார் பிரஷித் கிருஷ்ணா!
Image Source: Google

ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகினார் பிரஷித் கிருஷ்ணா!

By Bharathi Kannan March 12, 2024 • 20:07 PM View: 86

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பை பெறுவார்கள் என்பதால், இத்தொடர் மீது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடி வந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பிப்ரவரி 23, 2024 அன்று, வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா தனது இடது தொடையில் அறுவை சிகிச்சை செய்தார். தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ள அவர், விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு செயல்முறையைத் தொடங்குவார். இதன் காரணமாக வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க முடியாது” என்று தெரிவித்துள்ளது.

Related Cricket News on Indian premier league