Ks bharat
ரஞ்சி கோப்பை 2024: முதல் செஷனிலேயே சதமடித்து பிரித்வி ஷா சாதனை!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வாருகிறது. இதில் எலைட் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை மற்றும் சத்தீஸ்கர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. ராய்ப்பூரில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்ச் செய்வதாக அறிவித்து சத்தீஸ்கர் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் பூபன் லால்வானி இணை களமிறங்கினர். இப்போட்டியின் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா பவுண்டரியும், சிக்சகளுமாக விளாசித் தள்ளினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 18 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 159 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.