Legend league cricket
மீண்டும் களத்தில் இறங்கும் சௌரவ் கங்குலி; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஒவ்வொரு காலகட்ட கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. 1983ஆம் ஆண்டில் கேப்டன் கபில் தேவ் தலைமையில் இந்தியா கோப்பை வென்ற பிறகு, இந்தியாவில் கிரிக்கெட் பட்டிதொட்டி எங்கும் பரவ துவங்கியது.
அப்போது கபில் தேவ், சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், வெங்கடேஷ் பிரசாத் போன்ற முக்கிய வீரர்கள் இருந்தார்கள். இவர்கள் ஓய்வுபெற்ற பிறகு சச்சின் டெண்டுல்கர், கங்குலி, சேவிக், டிராவிட், லக்ஷ்மன் என இந்திய கிரிக்கெட் அடுத்த தலைமுறைக்கு சென்றது.