Advertisement
Advertisement
Advertisement

மீண்டும் களத்தில் இறங்கும் சௌரவ் கங்குலி; ரசிகர்கள் கொண்டாட்டம்!

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி பங்கேற்பார் என செய்தி வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 31, 2022 • 10:36 AM
Sourav Ganguly To Make On-Field Return, To Play Charity Match In Legends League Cricket
Sourav Ganguly To Make On-Field Return, To Play Charity Match In Legends League Cricket (Image Source: Google)
Advertisement

ஒவ்வொரு காலகட்ட கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. 1983ஆம் ஆண்டில் கேப்டன் கபில் தேவ் தலைமையில் இந்தியா கோப்பை வென்ற பிறகு, இந்தியாவில் கிரிக்கெட் பட்டிதொட்டி எங்கும் பரவ துவங்கியது.

அப்போது கபில் தேவ், சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், வெங்கடேஷ் பிரசாத் போன்ற முக்கிய வீரர்கள் இருந்தார்கள். இவர்கள் ஓய்வுபெற்ற பிறகு சச்சின் டெண்டுல்கர், கங்குலி, சேவிக், டிராவிட், லக்ஷ்மன் என இந்திய கிரிக்கெட் அடுத்த தலைமுறைக்கு சென்றது.

Trending


தொடர்ந்து மகேந்திரசிங் தோனி, ஜாகீர் கான், ரோஹித் சர்மா, விராட் கோலி, தினேஷ் கார்த்திக், பும்ரா என அடுத்த கட்டத்திற்கு கிரிக்கெட் சென்றுவிட்டது. இந்திய கிரிக்கெட் இப்படி அடுத்தடுத்து பல தலைமுறைகளைக் கண்டாலும் ரசிகர்களுக்கு ரசனை இப்படி அடுத்தடுத்த தலைமுறைக்கு முழுமையாக மாறவில்லை. கபில் தேவ் ரசிகர்கள் இன்னும் அவரைத்தான் புகழ்ந்து வருகிறார்கள்.

அதேபோல் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்கள், தோனி ரசிகர்கள் என தனித்தனி ரசிகர்கள் குழுக்கள் இருக்கிறார்கள். இதனால் ஓய்வு பெற்றுள்ள சச்சின், கங்குலி, சேவாக் போன்றவர்கள் மீண்டும் விளையாட மாட்டார்களா என அவர்களது ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்காகவே லெஜண்ட் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த தொடரில் ஓய்வுபெற்ற உலக அளவில் இருக்கும் ஸ்டார் வீரர்கள் பங்கேற்று வருகிறார்கள். கடந்த ஆண்டில் நடைபெற்ற லெஜண்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய லெஜண்ட், ஆசிய லெஜண்ட், உலக லெஜண்ட் அணிகள் பங்கேற்றன. கரோனா காரணமாக சச்சின், கங்குலி போன்ற முக்கிய வீரர்கள் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் தற்போது கரோனா கட்டுக்குள் இருப்பதால், செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 10 வரை இந்தியாவில் நடைபெறும் இந்த லெஜண்ட் தொடரில் சச்சின் உட்பட பல நட்சத்திர வீரர்கள் கலந்துகொள்வது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி, இதில் கலந்துகொள்வது உறுதியாகாமல் இருந்தது. இந்நிலையில் அவர் நிச்சயம் பங்கேற்பார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கெவின் பீட்டர்சன், பிரெட் லீ, முத்தையா முரளிதரன், ஜெயவர்தனே, அஃப்ரிடி, சோயிப் அக்தர், காலிஸ் போன்ற நட்சத்திர வீரர்களும் இத்தொடரில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement