Lucknow supergiants
அவர் எனது சகோதரர் போன்றவர் - குர்னால் குறித்து ஹூடா!
ஐபிஎல் 15ஆவது சீசனில் ஒருசில சர்ச்சைக்குரிய சண்டைக்கார வீரர்கள் ஒரே அணியில் இணைந்து ஆடுகின்றனர். 2019 ஐபிஎல்லில் ரன் அவுட்(மான்கட்) விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அஷ்வின் - பட்லர் ஆகிய இருவரும் இணைந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிவருகின்றனர்.
அதேபோல உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலியின் தொடரின்போது பரோடா அணியின் கேப்டன் குர்ணல் பாண்டியாவுடனான கருத்து முரண் காரணமாக அந்த அணியிலிருந்து வெளியேறியவர் தீபக் ஹூடா. ஆனால் இப்போது ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இருவரும் இணைந்து ஆடுகின்றனர்.