Advertisement

அவர் எனது சகோதரர் போன்றவர் - குர்னால் குறித்து ஹூடா!

குர்ணல் பாண்டியாவுக்கும் தீபக் ஹூடாவுக்கும் இடையே உள்நாட்டு தொடரின் போது மோதல் இருந்துவந்த நிலையில், ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக இருவரும் இணைந்து ஆடிவருகின்றனர்.  

Bharathi Kannan
By Bharathi Kannan April 07, 2022 • 19:19 PM
Krunal Pandya is like my brother and brothers do fight, says Deepak Hooda
Krunal Pandya is like my brother and brothers do fight, says Deepak Hooda (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 15ஆவது சீசனில் ஒருசில சர்ச்சைக்குரிய சண்டைக்கார வீரர்கள் ஒரே அணியில் இணைந்து ஆடுகின்றனர். 2019 ஐபிஎல்லில் ரன் அவுட்(மான்கட்) விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அஷ்வின் - பட்லர் ஆகிய இருவரும் இணைந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிவருகின்றனர்.

அதேபோல உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலியின் தொடரின்போது பரோடா அணியின் கேப்டன் குர்ணல் பாண்டியாவுடனான கருத்து முரண் காரணமாக அந்த அணியிலிருந்து வெளியேறியவர் தீபக் ஹூடா. ஆனால் இப்போது ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இருவரும் இணைந்து ஆடுகின்றனர்.

Trending


கடந்த ஆண்டு நடந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் பரோடா அணியில் குர்ணல் பாண்டியாவின் கேப்டன்சியில் ஆடிய தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா தன்னை வேண்டுமென்றே மற்றவீரர்கள் முன்பு மோசமான வார்த்தைகளால் திட்டுவதாகவும், தன் மீது பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும் கடிதம் மூலம் புகார் கூறியிருந்தார். 

ஆனால் தீபக் ஹூடாவின் புகாரின் அடிப்படையில் க்ருணல் பாண்டியா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தீபக் ஹூடா அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் ஐபிஎல்லிலும் அவர்களுக்கு இடையேயான மோதல் நீடித்தது.

அப்படியிருந்த சூழலில், குருணல் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரையும் மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி எடுத்தபோது பரபரப்பு கிளம்பியது. 

ஆனால் குருணல் பாண்டியா - தீபக் ஹூடா ஆகிய இருவரும் எந்த பிரச்னையும் இல்லாமல் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இருவரும், விக்கெட் கொண்டாட்டத்தின்போது கட்டிப்பிடித்துக்கொண்டனர். அந்த புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவர்கள் இருவரும் சார்ந்த பரோடா மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடியது.

இந்நிலையில், குருணல் பாண்டியா குறித்து பேசியுள்ள தீபக் ஹூடா, ‘குர்ணல் பாண்டியா எனது சகோதரர் மாதிரி. சகோதரர்களுக்கு இடையே சண்டை நடப்பது சகஜம் தான். நாங்கள் இருவரும் இப்போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காகத்தான் ஆடுகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement