Madhya pradesh cricket team
ரஞ்சி கோப்பை 2022: இறுதிப்போட்டிக்கு மத்திய பிரதேசம், மும்பை அணிகள் முன்னேற்றம்!
உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு அரையிறுதி போட்டியில் மத்திய பிரதேசம் - பெங்கால் அணிகளும், மற்றொரு அரையிறுதியில் மும்பை - உத்தர பிரதேச அணிகளும் மோதின.
மத்திய பிரதேசம் - பெங்கால் அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 341 ரன்கள் அடித்தது. பெங்கால் அணியில் மனோஜ் திவாரி மற்றும் ஷபாஸ் அகமது ஆகிய இருவரும் சதமடித்துமே அந்த அணி 273 ரன்கள் மட்டுமே அடித்தது.