Major dhyan chand khel ratna award
கேல் ரத்னா விருதை வென்ற முதல் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்!
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீரா் நீரஜ் சோப்ரா, இந்திய மகளிா் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஹாக்கி அணி கோல்கீப்பா் ஸ்ரீஜேஷ், இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி உள்பட 12 பேருக்கு விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான தியான்சந்த் கேல் ரத்னா விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற, சிறப்பாகச் செயல்பட்ட வீரா், வீராங்கனைகள் பலரும் இந்த விருது பட்டியலில் இணைந்துள்ளனா். இந்த ஆண்டு விருதுக்கான வெற்றியாளா்களை, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி முகுந்தகம் சா்மா தலைமையிலான தோ்வுக் குழு தோ்வு செய்துள்ளது.