Ms dhoni announcement
இது என்னுடைய கடைசி சீசனா? - தோனியின் பதிலால் ரசிகர்கள் கொண்டாட்டம்!
16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்றைய 45ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்த நிலையில், மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியில் முடிவு எட்டப்படாமல் நிறைவுசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.