Pakistan vs south africa
அணிக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுப்பவர்களே உண்மையான நம்பர் ஒன் வீரர் ஆவார் - கௌதம் கம்பீர்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த தென் ஆப்பிரிக்கா புள்ளி பட்டியலில் இந்தியாவை முந்தி முதலிடத்திற்கு முன்னேறியது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாராக விளையாடி 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக சௌத் ஷகீல் 52, கேப்டன் பாபர் அசாம் 50 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக தப்ரைஸ் ஷம்ஸி 4 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 271 ரன்கள் துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ஐடன் மார்க்ரம் 91 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனாலும் இதர வீரர்கள் கை கொடுக்க தவறியதால் கேள்விக்குறியான தெனாப்பிரிக்காவின் வெற்றியை கடைசி நேரத்தில் கேசவ் மகாராஜ் மற்றும் தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் தில்லாக விளையாடி பெற்றுக் கொடுத்தனர்.