Ravichandran ashwin
இந்திய அணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை அணியில் சேர்த்திருக்க வேண்டும் - அமித் மிஸ்ரா!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நேற்று சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ஏஜஸ் பவுல் நடைபெற இருந்தது. ஆனால் நேற்று முழுவதும் அங்கு பெய்த மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் போடப்படாமலேயே முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இப்போட்டிக்கான பிளேயிங் லெவனை இந்திய அணி முன்கூட்டியே அறிவித்திருந்தது. அதில் 6 பேட்ஸ்மேன்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் மழை பெய்துள்ளதால் அணியில் மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்க்க வேண்டும் என பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.