Richa ghosh crying video
ஒரு ரன்னில் வெற்றியை இழந்த ஆர்சிபி; களத்தில் கண்ணீர் விட்ட ரிச்சா கோஷ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற, 17ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஜெமிமா ரோட்ரிக்ஸ், அலிஸ் கேப்ஸி ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 58 ரன்களையும், அலிஸ் கேப்ஸி 48 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து இலக்கை துரத்தியா ஆர்சிபி அணியின் கடும் போட்டியை டெல்லி அணிக்கு வழங்கியது.