Rishabh pant injured
இங்கிலாந்து தொடரில் முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்? ஷாக்கில் இந்திய ரசிகர்கள்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அணியின் துணை கேப்டனும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் பயிற்சி அமர்வின் போது காயத்தை சந்தித்தாக கூறப்படுகிறது. மேலும் காயம் காரணமாக நேற்றைய பயிற்சி அமர்வில் இருந்தும் பந்த் பாதியில் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரின் காயம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
Related Cricket News on Rishabh pant injured
-
CT2025: பயிற்சியின் போது காயமடைந்த ரிஷப் பந்த்; வைரலாகும் காணொளி!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அணி வீரர் ரிஷப் பந்து காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47