இங்கிலாந்து தொடரில் முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்? ஷாக்கில் இந்திய ரசிகர்கள்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பயிற்சியின் போது இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அணியின் துணை கேப்டனும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் பயிற்சி அமர்வின் போது காயத்தை சந்தித்தாக கூறப்படுகிறது. மேலும் காயம் காரணமாக நேற்றைய பயிற்சி அமர்வில் இருந்தும் பந்த் பாதியில் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவரின் காயம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் காயத்தை சந்தித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போதுள்ள இந்திய டெஸ்ட் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களி ரிஷப் பந்த்தும் ஒருவராக இருக்கிறார். மேலும் அவருக்கு இங்கிலாந்தில் விளையாடிய் அனுபவமும் உள்ளது. இதனால் அவரது காயம் தற்சமயம் இந்திய அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை முதல் போட்டிக்கும் முன் ரிஷப் பந்த் காயத்திலிருந்து மீளாத பட்சத்தில் துருவ் ஜூரெல் மாற்று விக்கெட் கீப்பராக இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பைப் பெறுவார். தற்சமயம் நடைபெற்று வரும் இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டியிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் துருவ் ஜூரெல் தொடர்ச்சியாக மூன்று இன்னிங்ஸ்களிலும் அரைசதம் கடந்து அசத்தியதுடன் சிறப்பான ஃபார்மில் உள்ளார்.
இதனால் துருவ் ஜூரெல் அணியில் இடம்பிடிப்பார் என்பது ரசிகர்களை நிம்மதியடைய வைத்துள்ளது. ஆனால் ஏற்கெனவே இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அணியின் அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற அனுபவ வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளது அணிக்கு பெரும் சிக்கலாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், ரிஷப் பந்த்தின் காயமும் அணிக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்திலும், 2ஆவது போட்டி ஜூலை 2ஆம் தேதி பர்மிங்ஹாமிலும், 3ஆவது போட்டி ஜூலை 10ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், 4ஆவது போட்டி மான்செஸ்டரிலும், 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி ஓவல் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now