Saurashtra vs karnataka
ரஞ்சி கோப்பை: இறுதிப்போட்டிக்கு பெங்கால், சௌராஷ்டிரா அணிகள் முன்னேற்றம்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசம்-பெங்கால் அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் இந்தூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பெங்கால் அணி 438 ரன்னும், மத்தியபிரதேச அணி 170 ரன்னும் எடுத்தன. 268 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 3ஆவது நாளில் 2 விக்கெட்டுக்கு 59 ரன்கள் எடுத்து இருந்தது. சுதீப் குமார் கராமி 12 ரன்னுடனும், அனுஸ்டப் மஜூம்தார் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
4ஆவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 9 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்து 547 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. அதிகபட்சமாக அனுஸ்டப் மஜூம்தார் 80 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பிரதிப்தா பிராம்னிக் 60 ரன்னுடன் களத்தில் உள்ளார். மத்தியபிரதேசம் தரப்பில் சரன்ஷ் ஜெயின் 6 விக்கெட்டும், குமார் காத்திகேயா 3 விக்கெட்டும் சாய்த்தனர்.