Shikhar dhawan
கரோனா அச்சுறுத்தல்: ஆக்ஸிஜனுக்கு நிதியுதவி வழங்கிய தவான்!
ஐபிஎல் 2021 14ஆவது சீசனில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் அதிகபட்ச ரன்கள் அடித்த வீரராகவும் ஜொலித்து வருகிறார்.
இந்நிலையில் இவர், கரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும் இந்தியாவின் ஆக்சிஜனுக்காக ரூ.20 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.