Shubman gill
சதத்தை தவறவிட்டது குறித்து மனம் திறந்த சுப்மன் கில்!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியிலும் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது சிறப்பாக பேட்டிங் செய்து அசத்தியது. முதல் விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த நிலையில் தவான் 58 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
பின்னர் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரும், 8 ரன்கள் எடுத்த நிலையில் சூரியகுமார் யாதவும் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். ஆனால் ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாடி வந்த சுப்மன் கில் ஒரு கட்டத்தில் இந்திய அணி 36 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்திருந்த போது 98 ரன்களுடன் களத்தில் இருந்தார். எனவே நிச்சயம் அவர் இப்போட்டியில் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.