Sunrisers hyderbad
தெறித்த ஸ்டம்புகள்; புது வேகத்தில் யார்க்கர் கிங்!
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 26ஆம் தேதி முதல் மஹாராஷ்டிராவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த முறை 10 அணிகள் பங்கேற்பதால், 2 குரூப்களாக பிரிக்கப்பட்டு புதிய தோற்றத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறவிருக்கிறது.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் சில இந்திய வீரர்களுக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஃபிட்னஸ் பிரச்சினையால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள முன்னணி வீரர்கள், இதனை வைத்து தான் கம்பேக் கொடுக்கவுள்ளனர். அதில் மிகவும் முக்கியமானவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன்.