Sunrisers hyderbad
இது எங்களுக்கு சாதாரண விஷயமல்ல- உம்ரான் மாலிக்கின் தந்தை நெகிழ்ச்சி!
ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட் அணிக்கு தகுதி பெற வீரர்களுக்கான ஒரு சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளது என்றாது அது மிகையல்ல. ஏனெனில் இதுநாள் வரை பயிற்சி முகாம்களுக்கு சென்று பயிற்சி எடுத்த வீரர்கள் தான் இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படுவர் என்ற எண்ணத்தை மாற்றி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், தமிழகத்தின் நடராஜன், ஹைதராபாத் முகமது சிராஜ், ஜம்மு காஷ்மீரின் உம்ரான் மாலிக் போன்ற எண்ணற்ற ஏழ்மைக் குடும்பத்தில் இருந்து வந்த வீரர்களுக்கு வாய்ப்புக் கதவைத் திறந்துவைத்துள்ளது.
பல இளைஞர்கள் திறமையுடன் இருந்தும் இந்திய அணியில் நுழைவதற்கு வாய்ப்புகள் இல்லாமல் தவித்த நிலையில் அவர்கள் கைவைத்து ஊன்றி எழுவதற்குத் தளமாக ஐபிஎல் இன்று இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டு சீசன் முடிவிலும் புதிய திறமையான இளம் வீரர்கள் இந்திய அணிக்கு அடையாளம் காட்டப்படுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதில் எத்தனை பேர் வாய்ப்பு பெறுகிறார்கள், பெறப் போகிறார்கள் என்பது தெரியாது, ஆனால், நிச்சயம் ஒருநாள் இந்திய அணிக்குள் செல்வோம் என்ற நம்பிக்கை விதையை ஐபிஎல் தொடர் விதைத்துள்ளது.