Super 10 league
சூப்பர் 10 கிரிக்கெட் தொடரை தொடங்கிவைத்த கிறிஸ் கெயில், கிச்சா சுதீப்!
பிரபல இந்திய திரை நட்சத்திரங்கள், சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து விளையாடும், சூப்பர் 10 லீக்கின் முதல் பதிப்பை, இந்திய முன்னணி நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து 10 ஓவர் கொண்ட போட்டிகளில் பங்கேற்பார்கள். இந்த குறுகிய ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி மிகச்சிறந்த பொழுதுபோக்கை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிகள் டிசம்பர் 2022இல் பெங்களூருவில் 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது.