Suved parkar
ரஞ்சி கோப்பை 2022: வரலாற்று சாதனை நிகழ்த்திய மும்பை!
ரஞ்சி தொடரின் லீக் போட்டிகள் ஐபிஎல்லுக்கு முன் நடந்த நிலையில், ஐபிஎல் முடிந்து நாக் அவுட் போட்டிகள் நடந்துவருகின்றன. கடந்த 6ஆம் தேதி முதல் காலிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன.
இதில் மும்பை - உத்தரகண்ட் அணிகள் மோதிய காலிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி, சுவேத் பார்க்கரின் இரட்டை சதம்(252), சர்ஃபராஸ் கானின் சதம்(153) மற்றும் மற்ற சில வீரர்களின் கணிசமான பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 647 ரன்களை குவித்தது.