
ரஞ்சி தொடரின் லீக் போட்டிகள் ஐபிஎல்லுக்கு முன் நடந்த நிலையில், ஐபிஎல் முடிந்து நாக் அவுட் போட்டிகள் நடந்துவருகின்றன. கடந்த 6ஆம் தேதி முதல் காலிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன.
இதில் மும்பை - உத்தரகண்ட் அணிகள் மோதிய காலிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி, சுவேத் பார்க்கரின் இரட்டை சதம்(252), சர்ஃபராஸ் கானின் சதம்(153) மற்றும் மற்ற சில வீரர்களின் கணிசமான பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 647 ரன்களை குவித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய உத்தரகண்ட் அணி வெறும் 114 ரன்களுக்கு சுருண்டது. 533 ரன்கள் என்ற மெகா முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய மும்பை அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சதமும்(103), பிரித்வி ஷா(72) மற்றும் ஆதித்ய தரே(57) ஆகிய இருவரும் அரைசதம் அடிக்க, 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் அடித்து 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது மும்பை அணி.