
Mumbai beat Uttarakhand by 725 runs in the Quarterfinal of RanjiTrophy2022 (Image Source: Google)
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் காலிறுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 2ஆவது காலிறுதிப்போட்டியில் மும்பை - உத்திராகாண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி சுவெத் பார்க்கர் - சர்ஃப்ராஸ் கான் ஆகியோரது அபாரமான பேட்டிங்கின் மூலம் முதல் இன்னிங்ஸில் 647 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்தது.
இதில் சுவெத் பார்க்கர் 252 ரன்களையும், சர்ஃப்ராஸ் கான் 153 ரன்களையும் சேர்த்தனர். உத்திராகாண்ட் அணியில் தீபக் தபோலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.