Team india
இந்தியாவுக்கு எதிராக தான் மிகப்பெரும் சவால் உள்ளது - நாசர் ஹூசைன்!
இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்தப் போட்டிகள் ஹைதராபாத், விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி மற்றும் தர்மசலாவில் நடைபெற உள்ளது.
இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் தனது பாஸ்பால் யுக்தியை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இங்கிலாந்தின் இந்த யுக்தி கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் இங்கிலாந்து தொடர்ந்து அதே யுக்தியை பயன்படுத்தி வருகிறது. அந்த யுக்தியின் மூலம் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணியின் பாஸ்பால் யுக்திக்கு பெரும் சவால் எழ உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறியுள்ளார்.