Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Team india

இந்தியா தோல்வியை சந்தித்தது நிம்மதியை கொடுத்துள்ளது - சோயப் அக்தர்!
Image Source: Google

இந்தியா தோல்வியை சந்தித்தது நிம்மதியை கொடுத்துள்ளது - சோயப் அக்தர்!

By Bharathi Kannan September 16, 2023 • 18:11 PM View: 267

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி சூப்பர் 4 போட்டியில் ஏற்கனவே முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவை சூப்பர் 4 சுற்றுடன் முதல் அணியாக வெளியேறிய வங்கதேசம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கொழும்புவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் விராட் கோலி, பும்ரா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் போராடி 265/8 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 80, தஹீத் ஹிரிடோய் 54 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 266 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 0, திலக் வர்மா 5, கேஎல் ராகுல் 19, இசான் கிசான் 5, சூர்யகுமார் யாதவ் 26, ரவீந்திர ஜடேஜா 7 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர். அதனால் ஷுப்மன் கில் 121, அக்சர் படேல் 42 ரன்கள் எடுத்தும் 49.5 ஓவரில் இந்தியா 259 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

Related Cricket News on Team india