ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி புலவாயோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பந்துவீச அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஆண்டி மெக்பிரைன் மற்றும் மார்க் அதிர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்தனர். இதில் மார்க் அதிர் 13 பவுண்டரிகளுடன் 78 ரன்களையும், ஆண்டி மெக்பிரைன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 12 பவுண்டரிகளுடன் 90 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். இதன்மூலம் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement

ஜிம்பாப்வே தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிளெஸிங் முஸரபானி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கைடானோ - டாம் கரண் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 12 ரன்களைச் சேர்த்த நிலையில் பென் கரண் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து கைடானோ,பிரைன் பென்னட், வெஸ்லி மதவரே, கேப்டன் ஜானதன் காம்பெல் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தானர். அதேசமயம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிக் வெல்ச் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த பிளெஸிங் முசரபானி - ட்ரேவர் குவாண்டு இணை சிறப்பாக செயல்பட்டதுடன் கடைசி விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியியை முன்னிலைக்கு கொண்டு சென்றனர். இதில் அரைசதத்தை நெருங்கிய முசரபானி 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஜிம்பாப்வே அணி 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து தரப்பில் பேரி மெக்கர்த்தி 4 விக்கெட்டுகளையும், ஆண்டி மெக்பிரைன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் 7 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து அணியில் பீட்டர் மூர் 30 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இதனால் அயர்லாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 83 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆண்ட்ரூ மெக்பிரைன் 32 ரன்களுடனும், கர்டிஸ் காம்பேர் 14 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் பால்பிர்னி அரைசதம் கடந்தார். மறுபக்கம் கர்டிஸ் காம்பெர் 39 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஹாரி டெக்டர் 17 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து அரைசதம் கடந்து விளையாடி வந்த ஆண்ட்ரு பால்பிர்னியும் 66 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய பால் ஸ்டிர்லிங் 21 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய வீரர்களில் லோர்கன் டக்கர் அரைசதம் கடந்து 58 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 298 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்ட் ந்ங்கரவா 4 விக்கெட்டுகளையும், ட்ரெவர் குவாண்டு, வெஸ்லி மதவரே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் ஜிம்பாப்வே அணிக்கு 92 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியில் பென் கரண் 4 ரன்னிலும், கைடானோ, நிக் வெல்ச் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஜிம்பாப்வே அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதில் பிரையன் பென்னட் 15 ரன்களுடனும், ட்ரெவர் குவாண்டு ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். அயர்லாந்து தரப்பில் மார்க் அதிர், பேரி மெக்கர்த்தி, மேத்யூ ஹம்ப்ரிஸ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி நாளை 4ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News