2nd Test, Day 2: மீண்டும் சதம் விளாசிய பதும் நிஷங்கா; முன்னிலையில் இலங்கை!

Updated: Thu, Jun 26 2025 20:19 IST
Image Source: Google

SL vs BAN, 2nd Test: கொழும்புவில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி தொடக்க வீரர் பதும் நிஷங்கா சதமடித்து அசத்தியுள்ளார்.

இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சிங்கள ஸ்போர்ட் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரரான அனாமுல் ஹக் ரன்கள் ஏதுமின்றியும், மொமினுல் ஹக் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களிலும், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 8 ரன்களில் விக்கெட்டை இழந்தர். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீர்ரான ஷாத்மான் இஸ்லாமும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த முஷ்ஃபிக்கூர் ரஹிம் மற்றும் லிட்டன் தாஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியதுடன் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.  இதில் லிட்டன் தாஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்னிலும், முஷ்ஃபிக்கூர் ரஹீம் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மெஹிதி ஹசன் மிராஸ் 31 ரன்களிலும், நயீம் ஹசன் 25 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில்  247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அசிதா ஃபெர்னாண்டோ மற்றும் சோனல் தினுஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் லஹிரு உதாரா சிறப்பான தொடக்கத்தை வழங்கியதுடன் முதல் விக்கெட்டிற்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் 40 ரன்கள் எடுதிருந்த லஹிரு உதாரா விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தினேஷ் சண்டிமால் சிறப்பான ஆட்டத்தாஇ வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பதும் நிஷங்கா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தானது 5அவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் சதத்தை நெருங்கிய தினேஷ் சண்டிமால் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 93 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன் காரணமாக இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 290 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பதும் நிஷங்கா 146 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச அணி தரப்பில் தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதனையடுத்து 43 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை