சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த விராட் கோலி!

Updated: Mon, Sep 30 2024 20:09 IST
Image Source: Google

கான்பூர் டெஸ்டில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 35 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 47 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த 4ஆவது வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்று படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுலர் 623 இன்னிங்ஸில் 27ஆயிரம் ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்தது.

இந்நிலையில், தற்போது விராட் கோலி 594 இன்னிங்சிலேயே 27ஆயிரம் ரன்களை புதிய சாதனையைப் படைத்து சத்தியதுடன், சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்துள்ளார். மேற்கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் 27 ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் மற்றும் சர்வதேச அளவில் நான்காவது நான்காவது வீரர் எனும் சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா (28,016) மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (27,483) ஆகியோர் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் 27 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர்த்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9ஆயிரம் ரன்களை கடக்க விராட் கோலிக்கு மேலும் 82 ரன்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது மொமினுல் ஹக்கின் அபாரமான சதத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 233 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொமினுல் ஹக் 107 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ரோஹித் சர்மா 23, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 72, விராட் கோலி 47, கேஎல் ராகுல் 68 ரன்களைச் சேர்க்க, 34.4 ஓவர்களில் 285 ரன்களைக் குவித்ததுடன் இன்னிங்ஸையும் டிக்ளர் செய்தது. வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன், ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்துள்ள வங்கதேச அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சாத்மான் இஸ்லாம் 7 ரன்களுடனும், மொமினுல் ஹக் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 26 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி நாளை ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை