ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இத்தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் எதிவரும் நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் ரியாத்தில் நடத்தப்படும் என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன.

Advertisement

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6 வீரர்களை தக்கவைப்பதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் தொடகக் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ரூ.18 கோடிக்கு தக்கவைப்பதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதவிர்த்து ஆல் ரவுண்டர் ரியான் பராக்கை ரூ.14 கோடிக்கும், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலை ரூ.11 கோடிக்கும், ஷிம்ரான் ஹெட்மையரை ரூ.11 கோடிக்கும் தக்கவைத்துள்ள அந்த அணி, அன்கேப்ட் வீரராக சந்தீப் சர்மாவை ரூ.4 கோடிக்கும் தக்கவைத்துள்ளது. இதனால் எதிர்வரும் மெகா ஏலத்தில் அந்த அணி மிகக்குறைந்த தொகையுடன் பங்கேற்கவுள்ளது.

Advertisement

அதேசமயம்  அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் தக்கவைக்கவில்லை. இதன் மூலம் வீரர்கள் மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கேற்க இருக்கிறார். சர்வதேச அனுபவம் வாய்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினை ஏலத்தில் ஒப்பந்தம் செய்ய விரும்பும் பல அணிகள் போட்டிப்போடும். மேலும் அவரால் பேட்டிங்கும் செய்ய முடியும் என்பதால் அவருக்கான போட்டி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்யக்கூடிய 4 அணிகள் குறித்து இப்பட்டியலில் பார்ப்போம்.

1.சென்னை சூப்பர் கிங்ஸ்

வாஷிங்டன் சுந்தரை ஒப்பந்தம் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின நிலையில், அவருக்கு ஒரு பெரிய போட்டியாக ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் இவர்களில் யாரேனும் ஒருவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கடும் போட்டியில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சென்னை மைதானத்தில் வலது கை ஆஃப் ஸ்பின்னர் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதால் நிச்சயம் ஆஸ்வினின் தேவை சிஎஸ்கேவுக்கு உள்ளது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டுள்ல அஸ்வின், பேட்டிங்கிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது 38 வயதாகும் அஷ்வின் ஐபிஎல் தொடரில் இதுவரை 211 போட்டிகளில் விளையாடி 180 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

Advertisement

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தற்சமயம் நல்ல ஸ்பின்னர்கள் தேவை. ஏனெனில் லாக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற ஒரு மைதானமாக இருந்து வருகிறது. அதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டக்கூடும். மேலும் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிர ஆதரவை வழங்கக்கூடியவர் என்பதால் நிச்சயம் அவர்களின் ரேடாரில் அஸ்வினின் பெயரும் இடம்பிடிக்கும். மேற்கொண்டு அந்த அணி குர்னால் பாண்டியாவை வெளியேற்றியுள்ள நிலையில், அவரது இடத்தை நிரப்பும் வகையில் அஸ்வின் தேர்வுசெய்வதாக வாய்ப்பும் அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

3. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

எதிர்வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அஸ்வினை குறிவைக்கக்கூடிய அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஒன்று. எதன்படி நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஹைதராபாத் அணியில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் பெரிய சுழற்பந்து வீச்சாளர்கள் யாரும் இல்லை. அதிலும் குறிப்பாக வாஷிங்டன் சுந்தர், வநிந்து ஹசரங்கா உள்ளிட்டோர் காயம் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதால், அவர்களது இடத்தை ஐடன் மார்க்ரம் போன்ற பார்ட் டைம் பந்துவீச்சாளர்கள் நிரப்பினர். இதனால் இம்முறை அந்த அணி அஸ்வின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக தேர்வு செய்ய அதிகபடியான வாய்ப்புகள் உள்லனர். இது தவிர, 7 அல்லது நம்பர் 8ஆம் வரிசையிலும் அவரால் பேட்டிங் செய்ய முடியும் என்பதால் இதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. 

Advertisement

4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரை பெரிய தவறைச் செய்து அதன் விளைவுகளை தொடர்ந்து அனுபவித்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக யுஸ்வேந்திர சாஹலை அந்த உரிமையகம் வெளியிட்டது, அந்த வீரருடனான அவர்களின் ஏழு ஆண்டுகால தொடர்பை முடிவுக்கு கொண்டு வந்தது. மேலும் சின்னசாமி மைதானத்தை கருத்தில் கொண்டு, பந்துவீச்சாளர்கள் பொதுவாக பாதுகாப்பாக உணரவில்லை. அதனால் இம்முறை ஆர்சிபி அணியானது அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை குறிவைக்க தங்களால் இயன்றவரை முயற்சிக்கும். ஏனென்றால், களத்தில் அனுபவம் முக்கியமானதாக இருக்கும். அவருடன் சஹாலை தேர்வுசெய்யவும் அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News