ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த  இந்திய அணியில் ரிஷப் பந்த் 40 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்பிரித் பும்ரா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 185 ரன்களுக்கு ஆல அவுட்டானது.

Advertisement

அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர் பியூ வெப்ஸ்டர் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் சோப்பிக்க தவறினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களில் ஆல் அவுட்டானது. பின்னர் 4 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தாலும் அதிரடியாக ஸ்கோரை உயர்த்தி வருகிறது. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா தனது மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக இப்போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து இப்போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், அதனை அவரே மறுத்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “இப்போட்டியில் இருந்து என்னை யாரும் நீக்கவில்லை. அணிக்கு தேவைப்பட்டதன் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகினேன். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை வெளியில் இருப்பவர்கள் முடிவு செய்ய முடியாது. பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோருடன் நான் நடத்திய உரையாடல், என்னால் ரன்களை சேர்க்க முடியவில்லை மற்றும் நான் நான் ஃபார்மில் இல்லை என்பதை நேரடியாக கூறினேன்.

இது முக்கியமான போட்டி, எங்களுக்கு வெற்றி தேவை. ஃபார்மில் இல்லாத பல வீரர்களை எங்களால் கொண்டு செல்ல முடியாது, குறிப்பாக பலர் பேட்டிங்கில் சிறந்த ஃபார்மில் இல்லை. அதனால் எனது முடிவு குறித்து நான் அவர்களிடம் கூறினேன். அவர்கள் என் முடிவை ஆதரித்ததுடன், 'நீங்கள் பல ஆண்டுகளாக விளையாடுகிறீர்கள், செய்ய வேண்டியதைச் செய்வதில் நீங்கள் சிறந்த நபர்' என்று கூறினார்.

இது எனக்கு கடினமான முடிவாக இருந்தது, ஆனால் எல்லா சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு அணியின் நலனுக்காக எடுத்த ஒரு விவேகமான முடிவு இது. சிட்னிக்கு வந்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. மெல்போர்னுக்குப் பிறகு, சில நாட்கள் இருந்தன, அவற்றில் ஒன்று புத்தாண்டு தினம். அன்று இதைப் பற்றி பயிற்சியாளர் மற்றும் தேர்வாளரிடம் சொல்ல விரும்பவில்லை. இந்தப் போட்டியில் இருந்து ஒதுங்குவது எனக்கு முக்கியம் என்பதால் நான் அதை ஏற்க வேண்டியதாயிற்று” என்று கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News