ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி எல்லாருடைய கணிப்பையும் தவிடு பொடியாக்கி டி20 கிரிக்கெட்டுக்கு இன்னொரு வடிவத்தை கொடுத்திருக்கிற அணியாகும். இந்த அணியில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேன் இளம் வீரர் சாய் சுதர்சன் முக்கிய பேட்ஸ்மேனாக உயர்ந்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் 96 ரன்கள் விளாசி, தன் திறமையின் மூலம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

Advertisement

ஐபிஎல் தொடரின் முடிவுக்குப் பின்னால் பேசிய அவர், “என்னுடைய முந்தைய அனைத்து ஆட்டங்களிலும் நான் கில் உடன் இணைந்து விளையாடினேன். அவர் வேகமாக ரன்கள் எடுத்தார். நான் இந்த முறை சகா பாய் உடன் இணைந்து விளையாடினேன். ரன் விகிதம் சரிந்தது. நாங்கள் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இருந்தோம். எனவே அடிப்பதற்கான வாய்ப்புகளை எடுப்பது நல்லது என்று நினைத்தேன். நான் அந்த நோக்கத்துடன் விளையாடினேன்.

Advertisement

நான் எதையும் வித்தியாசமாகச் செய்யவில்லை. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக நாங்கள் எங்கள் ஆயத்த முகாம்களை நடத்தினோம். அதில் நாங்கள் எங்களைப் பற்றியே நிறைய கற்றுக் கொண்டோம். மேலும் அணியில் எங்களது பங்கு என்னவாக இருக்கும்? நாங்கள் எவ்வாறு சிறந்த பங்களிப்பது? என்று தெளிவாகிக் கொண்டோம்.

ஹர்திக் பாண்டியா போன்ற கேப்டன் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம். அவர் உங்களை வெளிப்படுத்துவதற்கான தளத்தையும் தன்னம்பிக்கையும் தருகிறார். அன்றைய நாள் ஆட்டத்தைப் பொருட்படுத்தாமல் அவர் உங்களை மிகவும் வசதியாக உணர வைக்கிறார். என்னுடைய கடைசி இன்னிங்ஸில் கூட நான் அடித்திருக்க வேண்டிய சில பந்துகளைத் தவறவிட்டேன். ஆனால் அவர் என்னால் இன்னும் நிறைய பந்துகளை அடித்து சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தார்.

வெவ்வேறு போட்டிச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு எப்படி விளையாடுவது? என்று நான் பயிற்சியாளர் கிரிஸ்டனிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன். பதிரனா பந்தைத் தாழ்வாக வீசுகிறார். அதனால் நான் இன்னும் கீழே சென்று விளையாடினேன். நான் இதை மிகவும் மனப்பூர்வமாக திட்டமிட்டு செய்யவில்லை. அதை எப்படி என்று உங்களுக்கு விளக்க முடியாது. இது இயற்கையாகவே நடந்தது.

நான் இப்பொழுது சிறப்பாக விளையாடி இருக்கலாம். ஆனால் நான் மிடில் மற்றும் டெத் ஓவர்களில் எனது ஆட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். விளையாட்டு வீரர்களான எனது பெற்றோரிடமிருந்து நான் இத்தகைய குணங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News