அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் இதுதான் - ஏபி டி வில்லியர்ஸ் கணிப்பு!

Updated: Wed, May 29 2024 20:06 IST
அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் இதுதான் - ஏபி டி வில்லியர்ஸ் கணிப்பு! (Image Source: Google)

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

இதனைத்தொடர்ந்து இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், எந்த நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதன்படி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று ஏபி டி வில்லியர்ஸ் கணித்துள்ளார். முன்னதாக தனது நான்காவது அணியை கணித்த ஏபிடி வில்லியர்ஸ், அந்த இடத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை வகைப்படுத்தினார். 

ஆனால் அதன்பின் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு யூனிட்டானது சிறப்பாக உள்ளதாகவும், அதனால் அவர்கள் ஒரு ஆபத்தான அணி என்பதாலும் அந்த அணியால் அரையிறுதிக்கு முன்னேறும் என்று தனது கணிப்பை தெரிவித்துள்ளார். அதனைத் தாண்டி இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் நிச்சயம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று ஏபி டி வில்லியர்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை