ரசிகர்களை கவர்வதற்காக கடந்த 2005இல் துவங்கப்பட்ட 20 ஓவர் போட்டிகள் அதுவரை நடைபெற்ற டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை பின்னுக்குத்தள்ளி நம்பர் ஒன் கிரிக்கெட்டாக மாறியது. அதை பார்த்து கடந்த 2008இல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கிய ஐபிஎல் தொடர் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கண்டு இன்று உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

Advertisement

இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்கள் எதிர்பாராத த்ரில்லர் முடிவுகளை கொடுப்பதால் உலக கோப்பைகளை விட தரத்தில் மிஞ்சியுள்ள ஐபிஎல் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை வருமானமாக கொட்டிக் கொடுக்கிறது.

Advertisement

அதனால் உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக உருவாகியுள்ள ஐபிஎல் தொடரின் 2023 – 2027 ஒளிபரப்பு உரிமை 48,390 கோடிகளுக்கு ஏலம் போனது. அதன் காரணமாக என்எப்எல் தொடருக்கு அடுத்தபடியாக ஈபிஎல், என்பிஏ போன்ற இங்கிலாந்து,அமெரிக்க நாடுகள் நடத்தும் கால்பந்து, கூடைப்பந்து தொடர்களை முந்தி உலகில் அதிக பணத்தை கொடுக்கும் 2ஆவது விளையாட்டு தொடராக ஐபிஎல் சாதனை படைத்துள்ளது. 

இதை மேலும் வளர்க்க நினைக்கும் பிசிசிஐ வரும் 2025 முதல் 94 போட்டிகள் கொண்ட தொடராக ஐபிஎல் தொடரை விரிவு படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் உலக அளவில் கிரிக்கெட் நம்பர் ஒன் விளையாட்டு தொடராக உருவாவதற்கும் இரு மடங்கு பணம் கிடைப்பதற்கும் பிரகாசமான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. ஆனால் இந்த அபரித வளர்ச்சி சர்வதேச அளவில் நடைபெறும் நிறைய இருதரப்பு தொடர்களை பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

இந்த வேளையில் அடுத்ததாக ஒரு வருடத்திற்கு 2 ஐபிஎல் நடக்கப் போகிறது என்ற பேச்சுகளும் அடிபட்டு வருகின்றன. இதுபோக ஐபிஎல் தொடரில் அணிகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் துபாய் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் தங்களது கிளை அணிகளை வாங்கியுள்ளார்கள். அந்த 2 புதிய டி20 தொடர்களும் வரும் 2023 ஜனவரி நடைபெற உள்ளது. அதற்காக அந்த மாதத்தில் ஆஸ்திரேலியாவில் பங்கேற்க இருந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா பகிரங்கமாக ரத்து செய்துள்ளது. 

இதனால் ஏற்கனவே மறைமுகமாக ஒரு வருடத்திற்கு 2 ஐபிஎல் கிட்டத்தட்ட நடைபெறத் தொடங்கி விட்டது. இந்நிலையில் ஐபிஎல் விரிவடைவது நல்லதுதான் ஆனால் ஒரு வருடத்திற்கு 2 ஐபிஎல் என்பது மிகவும் ஆபத்தானது என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கவலை தெரிவித்துள்ளார்.

Advertisement

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசுகையில், “நான் இதை ஆத்திரமூட்டும் அர்த்தத்தில் சொல்லவில்லை. இருப்பினும் இது நியாயமான கேள்வி இல்லையா? 2 ஐபிஎல் நடந்தால் அது ஆபத்தானது என்று நான் நம்புகிறேன். அது சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் ஊடுருவ தொடங்கும். இது அந்தந்த நாடுகளில் உள்ள உள்நாட்டு போட்டிகளையும் சேதப்படுத்தும். மேலும் அது இந்தியா அவர்களின் மார்க்கெட்டை உருவாக்க உதவாது. அது இருவழி தெரு போல் தோன்றவில்லை.

கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் மிகச்சிறந்த தளத்தை கொடுத்துள்ளது. அதில் நானும் ஆறு வருடங்கள் விரும்பி விளையாடினேன். இருப்பினும் என்னை ஐபிஎல்க்கு எதிரானவர் என்று செய்தியாளர்கள் எழுதுவதை நான் விரும்பவில்லை. ஆனால் பிக்பேஷ் தொடரில் இந்திய வீரர்கள் ஏன் விளையாடுவதில்லை. ஐபிஎல் போன்ற ஒரு சில தொடர்களில் மட்டும் ஏன் உலகின் அனைத்து நாட்டு வீரர்களும் விளையாடுகின்றனர்? இதர டி20 தொடரில் இந்திய வீரர்கள் விளையாடுவதில்லை.

உலகின் முதன்மை டி20 தொடரான ஐபிஎல் தொடரில் விளையாடுவது சிறந்த அனுபவம். ஆனால் அதற்காக மற்ற நாடுகளில் நடக்கும் போட்டிகளில் அனைவரும் பங்கேற்பது முக்கியம். இதர தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாடினால் மிகவும் சிறப்பாக இருக்கும். அப்படி நடந்தால் ஐபிஎல் தொடரின் தனித்துவம் குறையும் என்று நான் நினைக்கவில்லை. சொல்லப்போனால் அது மவுசை அதிகப்படுத்தும்” என்று கூறிவுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News